சீன வைரஸ் விவகாரம்! சுகாதார அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
சமகாலத்தில் அதிகமாக கவனத்தை ஈர்த்துள்ள சீன வைரஸ் (HMPV) தொடர்பில் தற்போது அரசாங்கம் மிகவும் விழிப்புடன் இருப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொதுமக்களின் பாதுகாப்பு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தொற்றுநோயியல் பிரிவு இது தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு தொடர்ந்து அறிக்கைகளை வழங்கி வருகின்றது. வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் குறித்து தகவல் கிடைத்தால், அது குறித்து தெரிவிப்பதற்கு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த வைரஸ் தொடர்பில் இதுவரை எவ்வித பிரச்சினைக்குரிய சூழ்நிலையும் ஏற்படவில்லை. நமது சுகாதார அதிகாரிகள் இதனை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உலகளாவிய சுகாதார நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 14 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
