சீன வைரஸ் விவகாரம்! சுகாதார அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
சமகாலத்தில் அதிகமாக கவனத்தை ஈர்த்துள்ள சீன வைரஸ் (HMPV) தொடர்பில் தற்போது அரசாங்கம் மிகவும் விழிப்புடன் இருப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொதுமக்களின் பாதுகாப்பு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தொற்றுநோயியல் பிரிவு இது தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு தொடர்ந்து அறிக்கைகளை வழங்கி வருகின்றது. வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் குறித்து தகவல் கிடைத்தால், அது குறித்து தெரிவிப்பதற்கு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வைரஸ் தொடர்பில் இதுவரை எவ்வித பிரச்சினைக்குரிய சூழ்நிலையும் ஏற்படவில்லை. நமது சுகாதார அதிகாரிகள் இதனை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உலகளாவிய சுகாதார நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri