கொழும்பு மாவட்டம் முழுவதும் கோவிட் வைரஸால் அதிகமான மக்கள் பாதிப்பு
கொழும்பு மாவட்டம் முழுவதும் பிலியந்தலை, மொரட்டுவ மற்றும் கல்கிசை உள்ளிட்ட பகுதிகளில் கோவிட் வைரஸால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் 555 பேர் கோவிட் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.
அவர்களில் 126 பேர் பிலியந்தலையைச் சேர்ந்தவர்கள். மொரட்டுவையில் 42 பேர், கல்கிசையில் 33 பேர், மகரகமவில் 35 பேர், பொரலெஸ்கமுவவில் 33 பேர், பம்பலப்பிட்டியில் 19 பேர், மிரிஹனவில் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இந்த காலகட்டத்தில் கம்பஹா மாவட்டத்தில் 236 பேரும், களுத்துறையில் 211 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 218 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவிட் வைரஸின் மூன்றாவது அலை ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது என்று பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் இந்த வாரம் எச்சரித்துள்ளனர்.
அத்துடன் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயரும் மற்றும் இரண்டு வாரங்களில் அதன் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலான குடும்ப உறுப்பினர்கள் மற்றும்
நெருங்கியவர்கள் பரிசோதிக்கப்படவில்லை
அவர்கள் பரிசோதிக்கப்பட்டதும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்
என்றும் பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.