இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவின் தலையீடு அவசியம்: தமிழர் தரப்பு கோரிக்கை

Sri Lankan Tamils Ranil Wickremesinghe India Northern Province of Sri Lanka
By Dharu Jul 14, 2024 09:28 AM GMT
Report

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியாவினால் மட்டுமே தலையீடுகளைச் செய்ய முடியும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி விளக்கமளித்துள்ளது.

கொழும்பில் இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன்  இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின் போதே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான வேட்பாளர்களிடம் நிபந்தனைகளை முன்வைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு சந்தோஷ் ஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் கோரிக்கைக்கு பதில் வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டணியினர்,

மொட்டு கட்சிக்கான வேட்பாளர் குறித்து அறிவிப்பு

மொட்டு கட்சிக்கான வேட்பாளர் குறித்து அறிவிப்பு

பெரும்பான்மை வாக்கு

தென்னிலங்கை வேட்பாளர்களால் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகின்ற நிலைமைகளே எமக்கு காணப்படுகின்றன. அந்த வகையில் நாம் இம்முறை தமிழ் மக்களின் சார்ப்பில் ஒரு வேட்பாளரை களமிறக்கப்போகின்றோம். மூன்று பேர் தென்னிலங்கையில் போட்டியிடுகின்றபோது, பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக்கொள்வது மிகவும் கடினமான விடயமாகும்.

இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவின் தலையீடு அவசியம்: தமிழர் தரப்பு கோரிக்கை | High Commissioner Santjha Met Dtna Today Party

அதனை தென்னிலங்கையில் களமிறங்குவதற்கு தயாராகவுள்ள ரணில், சஜித், அநுர ஆகியோர் புரிந்துகொண்டுள்ளார்கள்.

அதன் காரணத்தினாலேயே அவர்கள் தற்போது வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளுக்கு விஜயங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். ஆகவே அவர்களுக்கு தமிழ்த் தரப்பு நோக்கி தற்போது வருகை தரவேண்டிய நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

அநுரகுமார மாகாண சபைகள் பற்றிப் பேசினாலும் அவர்கள் மாகாண சபைக்கான அதிகாரங்கள் தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக தெரியவில்லை. அவர்கள்தான் வடக்கு, கிழக்கு பிரிக்கப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளனர்.

அவர்களை ஆதரிப்பது முரணான நிலைப்பாடாகவே காணப்படும்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இயக்கப்பட்ட புதிய மின்பிறப்பாக்கி

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இயக்கப்பட்ட புதிய மின்பிறப்பாக்கி

இனப்பிரச்சினைக்கான தீர்வு

அத்தோடு சஜித் பிரேமதாச இதுவரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட தமிழ் மக்களின் விடயங்கள் சம்பந்தமாக கரிசனைகளைக் கொள்ளாதிருந்த நிலையில் தற்போது 13ஆவது திருத்தச்சட்டம் பற்றி கூறுகின்றார்.

அதிலும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாத மாகாண சபை முறைமையை இலக்காக கொண்டுள்ளார். மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் செல்வதற்கு தயாரில்லை.

இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவின் தலையீடு அவசியம்: தமிழர் தரப்பு கோரிக்கை | High Commissioner Santjha Met Dtna Today Party

கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில்காணி, பொலிஸ் அதிகாரங்கள் அற்ற மாகாண சபை முறைமை நடைமுறையாக்கம் குறித்தே உரையாற்றியிருந்தார்.

ஆகவே மூன்று வேட்பாளர்களும் 13ஆவது திருத்தச் சட்டத்தினைக் கூட முழுமையாக முன்னெடுப்பதற்கு தயாரில்லாத நிலையில் தான் உள்ளார்கள். அவ்வாறான நிலையில் அவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதில் பயனில்லை.

அதேநேரம், அவர்களும் தென்னிலங்கையில் தங்களது வாக்குவங்கி சரிந்துவிடும் என்பதற்காக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தயாரில்லாத நிலைமையிலேயே உள்ளனர்.

மேலும், தென்னிலங்கை தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வதாக இருந்தர் மூன்றாம் தரப்பின் தலையீட்டுடன் தான் பங்கேற்பது பொருத்தமானது. ஆனால் அதற்குரிய நிலைமைகளும் பூரணமான அளவில் சாதகமாக இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ட்ரம்ப்பை படுகொலை செய்ய முயற்சி: ரணில் வெளியிட்ட கருத்து

ட்ரம்ப்பை படுகொலை செய்ய முயற்சி: ரணில் வெளியிட்ட கருத்து

இந்தியாவின் தலையீடு

ஆகவே மூன்று வேட்பாளர்களும் 13ஆவது திருத்தச் சட்டத்தினைக் கூட முழுமையாக முன்னெடுப்பதற்கு தயாரில்லாத நிலையில் தான் உள்ளார்கள். அவ்வாறான நிலையில் அவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதில் பயனில்லை.

இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவின் தலையீடு அவசியம்: தமிழர் தரப்பு கோரிக்கை | High Commissioner Santjha Met Dtna Today Party

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியாவினால் மட்டுமே தலையீடுகளைச் செய்ய முடியும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

இவ்வாறான சூழலில் இந்தியாவும் பல சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கத்திடம் தமிழர்களின் தீர்வு விடயத்தில் கரிசனைகளை வெளிப்படுத்தியுள்ளபோதும் இலங்கை அரசாங்கம் நடைமுறையில் எதனையும் முன்னெடுத்ததாக இல்லை.

மேலும், தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதன் ஊடாக தமிழ் மக்களின் பிரதிபலிப்புக்களை மையப்படுத்தி இலங்கை அரசாங்கத்திற்கு மேலதிக அழுத்தங்களை இந்தியாவினால் வழங்க முடியும். என தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பல கோடி ரூபாய் இழப்பு

அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பல கோடி ரூபாய் இழப்பு

இந்நிலையில், இந்த சந்திப்பில் ஜனநாய கூட்டணியின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், கோவிந்தன் கருணாகரம், வினோ நோகராதலிங்கம், வேந்தன், சிவநேசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US