உலங்குவானூர்தி மேலே எழும் போதே விழுந்து விட்டது-பொதுஜன பெரமுன
உலங்குவானூர்தி மேல் நோக்கி எழுந்த போதே கீழே விழுந்து விட்டது எனவும் தற்போது உலங்குவானூர்தியின் இறக்கைகள் உடைந்து விட்டன எனவும் முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனுக்களை களுத்துறை மாவட்ட செயலகத்தில் இன்று தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வேட்பாளர்களை தேடும் உலங்குவானூர்தி கூட்டணி
உலங்குவானூர்தி மேல் நோக்கி புறப்பட தயாரான போது பல அபசகுணங்கள் ஏற்பட்டன. தற்போது அவர்கள் உலங்குவானூர்தியை பறக்கவிடுவதற்கு பதிலாக வேட்பாளர்களை தேட கீழ் நோக்கி இறக்கி வருகின்றனர்.
எந்த கட்சியிலும் சமய தலைவர் ஒருவர் இருப்பார். எனினும் அதில் தலைமைத்துவ சபை இருக்கின்றது. அதில் 30 பேர் இருக்கின்றனர். இந்த 30 பேர் முடிவுகளை எடுக்கும் போது என்ன நடக்கும் என்பதை எதிர்காலத்தில் காணமுடியும்.
இதனால், உலங்குவானூர்தியை விட மீன் கொத்தி சின்னம் சிறந்தது. மீன் கொத்தி மேல் நோக்கி பறக்கும், இரையை கண்டால் மீண்டும் கீழ் நோக்கி வரும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சிறந்த கட்சி. தற்போது அந்த கட்சியை எங்கு இழுத்து செல்கின்றனர் என்பது தெரியவில்லை. அது குறித்து நாங்கள் வருத்தப்படுகிறோம்.
மைத்திரியை சுவரில் வைத்து ஆணி அடிப்பார்கள்
எப்போதாவது ஒரு நாள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சுவரில் வைத்து ஆணி அடிப்பார்கள் எனவும் ரோஹித்த அபேகுணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, டலஸ் அழகப்பெரும அணி, விமல் வீரவங்ச அணியினர் இணைந்து உருவாக்கியுள்ள சுதந்திர மக்கள் கூட்டணியின் சின்னமாக உலங்குவானூர்தி சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்த கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதாக கூறிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தற்போது தனித்து போட்டியிடுகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri
