முப்படை தலைமை தளபதியின் உடலத்துக்கு இறுதி மரியாதை வழங்கிய தமிழக முதல்வர்
இந்திய இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் வீரர்களின் உடலங்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.
துக்கத்தை காட்டும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கறுப்பு துண்டு அணிந்த படி இராணுவ அதிகாரிகள் உடலங்களுக்கு வீர வணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்ட இராணுவ முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட்ட 13 பேரின் உடலங்கள் வெலிங்டன் இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
அங்கு பரிசோதனை மூலம் உயிரிழந்த வீரர்களின் உடலங்கள் அடையாளம் காணப்பட்டன.
அதன்பின் இன்று முற்பகல் 10.40 மணியளவில் மருத்துவமனையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் உடல்கள் வெலிங்டன் இராணுவ மையத்திற்கு கொண்டு வரப்பட்டன
இதன்போதே தமிழக முதல்வர் உடலங்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
