எதிர்வரும் வாரத்தில் கடுமையான பனிப்பொழிவு - ஜேர்மன் மக்களுக்கான எச்சரிக்கை
பனிப்புயல் காரணமாக எதிர்வரும் வாரத்தில் ஜேர்மனியில் குறைந்த அளவிலான வெப்பநிலை பதிவாகும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடுமையான பனி மற்றும் குளிர்கால புயல்களால் ஜேர்மனியின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் முக்கிய பகுதிகளில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளதுடன் விளையாட்டுப் போட்டிகள் சிலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த வார இறுதியில், ஜேர்மனியில் கடுமையான குளிர் காலநிலை நிலவியதால் எதிர்வரும் வாரத்தில் வெப்பநிலை மிகக்குறைவாகவே காணப்படும் என வானிலை அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், திங்கட் கிழமை அதிக பனிப்பொழிவு ஏற்படும் என்றும் ஜேர்மனியில் சில பகுதிகளில் 40 சென்றி மீற்றர் வரை பனி மூடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri