ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன்பாக பலத்த பாதுகாப்பு
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின்(Ravi Karunanayake) வீட்டிற்கு முன்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயர் அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (18.11.2024) வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அக்கட்சியின் வஜிர அபேவர்தன நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி தேசியப்பட்டியல் நியமனம் வழமைக்கு முரணானது என தெரிவித்திருந்தார்.
தேசியப் பட்டியல்
இது கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு என சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தின் தேசியப் பட்டியலில் ரவி கருணாநாயக்கவின் பெயர் உள்ளடக்கப்பட்டமை தொடர்பில் அந்த முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தரப்பினர் நேற்று ஆட்சேபனைகளை வெளியிட்டுள்ளனர்.
அசாத் சாலி
இதன்படி ரவி கருணாநாயக்கவின் வீடு முற்றுகையிடப்பட வேண்டும் எனவும், இந்த முடிவை மாற்றியமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி (asath-salli) தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே இன்றைய தினம் ஏதேனும் எதிர்ப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தில் ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 4 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri