கால நிலையில் ஏற்பட்ட மாற்றம்: நயினாதீவில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு
கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நயினாதீவில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என்.சூரிய ராஜா (Suriya Raja ) தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் நடாத்திய ஊடக சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 20.6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. எனினும் இதுவரை பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் எதுவும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு கிடைக்கவில்லை என்றார்.
வங்காள விரிகுடாவின் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவதோடு மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
எனவே பொதுமக்கள் தங்களையும் தங்களது உடமைகளையும் குறித்த காலப்பகுதியில் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
குறிப்பாக கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60- 65 கிலோமீற்றர் வரை வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காலப்பகுதியில் கடலானது கொந்தளிப்பாக காணப்படுவதனால் குறிப்பாக கரையோரப் பகுதி மக்கள் மற்றும் கடற்தொழிலுக்கு செல்வோர் குறித்த காலப்பகுதியில் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அந்த காலப்பகுதியில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் எனவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் சுதுமலை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் நீண்ட காலமாக கடந்த 30 வருடங்களாக நீர் தேங்கி நிற்கின்ற பாரிய பிரச்சினை காணப்படுகின்றது குறிப்பாக கொத்தலாவல வடிகால் அமைப்பு சரியாக இயங்காததன் காரணமாக பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
நேற்றையதினம் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் சம்பந்தப்பட்ட தொழில் நுட்ப பிரிவினருடன் சென்று அப்பகுதியில் கலந்துரையாடலை மேற்கொண்டோம் குறித்த கலந்துரையாடலில் பிரகாரம் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய சுமுகமான தீர்வு அப்பகுதியில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
