இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
அதிக வெப்பம் காரணமாக சூரிய ஒளி நேரடியாக கண்ணில் பட்டால் கண்பார்வை பாதிக்கப்படலாம் என கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியரும் கண் சத்திரசிகிச்சை நிபுணருமான மதுவந்தி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் கண்புரையின் நிலையும் அதிகரிக்கலாம் எனவும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சில பிரதேசங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் இன்று அவதானிக்கப்பட வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வடமேற்கு, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அதிகளவில் இருக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுப்பது, கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது போன்ற சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
