எழுமாறான கோவிட் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு சுகாதார தரப்பினர் கோரிக்கை
எழுமாறாக நடாத்தப்படும் கோவிட் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டுமென சுகாதாரத்தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூகத்தில் கோவிட் தொற்று உறுதியாளர்கள் இருக்கக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எழுமாறான அடிப்படையில் பீ.சீ.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்வது மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் (GMOF) அமைப்பு அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
நோய் அறிகுறி தென்படாத நோய் தொற்று உறுதியாளர்கள் சமூகத்தில் இருக்கலாம் எனவும் அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவோ அல்லது சிகிச்சை பெற்றுக்கொள்ளவோ கூடிய சாத்தியங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
நாட்டில் கோவிட் தொற்று உறுதியாளர்கள் குறித்த புள்ளி விபரங்களை விடவும் மெய்யான எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எனவும், அதற்கு குறைவான எண்ணிக்கையில் பரிசோதனைகள் மேற்கொள்வதே காரணம் எனவும் தெரிவித்துள்ளது.
எழுமாறான அடிப்படையில் என்டிஜன் மற்றும் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ளது.
பொதுமக்களும் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றுவதில்லை எனவும் சுட்டிகாட்டியுள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 2 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri