எழுமாறான கோவிட் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு சுகாதார தரப்பினர் கோரிக்கை
எழுமாறாக நடாத்தப்படும் கோவிட் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டுமென சுகாதாரத்தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூகத்தில் கோவிட் தொற்று உறுதியாளர்கள் இருக்கக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எழுமாறான அடிப்படையில் பீ.சீ.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்வது மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் (GMOF) அமைப்பு அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
நோய் அறிகுறி தென்படாத நோய் தொற்று உறுதியாளர்கள் சமூகத்தில் இருக்கலாம் எனவும் அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவோ அல்லது சிகிச்சை பெற்றுக்கொள்ளவோ கூடிய சாத்தியங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
நாட்டில் கோவிட் தொற்று உறுதியாளர்கள் குறித்த புள்ளி விபரங்களை விடவும் மெய்யான எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எனவும், அதற்கு குறைவான எண்ணிக்கையில் பரிசோதனைகள் மேற்கொள்வதே காரணம் எனவும் தெரிவித்துள்ளது.
எழுமாறான அடிப்படையில் என்டிஜன் மற்றும் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ளது.
பொதுமக்களும் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றுவதில்லை எனவும் சுட்டிகாட்டியுள்ளது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan