பிரித்தானியாவில் உள்ள இலங்கை வைத்தியர்களுக்கு அவசர அழைப்பு
பிரித்தானியாவுக்கு சென்ற இலங்கை வைத்தியர்கள் இலங்கைக்குத் திரும்புவது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கோரியுள்ளார்.
இது நாட்டில் உள்ள சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறையை எடுத்துக்காட்டுகிறது.
அமைச்சர் ஜயதிஸ்ஸ, அண்மையில் பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்தக் கோரிக்கையை விடுத்ததாக சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
வழங்கப்பட்டுள்ள உறுதிப்பாடு
இலங்கை உயர் ஸ்தானிகராலயம் பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை மருத்துவர்களுடன் ஏற்பாடு செய்த சந்திப்பில் கலந்து கொண்டதாகவும், அப்போது தான் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாகவும் சுகாதார அமைச்சர் கூறினார்.

"இந்தக் கலந்துரையாடலின் போது, பல்வேறு காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறிய நமது சிறப்பு மருத்துவர்களிடம், இலங்கைக்குத் திரும்புவது குறித்து பரிசீலிக்குமாறு நான் ஒரு சிறப்பு வேண்டுகோளை விடுத்தேன்.
தற்போது நமது சுகாதார சேவையில் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை உள்ளது" என்று அவர் கூறினார்.
அவர்கள் இலங்கையில் பணிக்குத் திரும்பினால், அவர்களின் முந்தைய அனைத்து சேவை சலுகைகளுடன் அதே பதவிகளில் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள் என்று தாம் உறுதியளித்ததாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri