இந்தியாவில் அரசியல் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற ஹமாஸ் அமைப்பின் தலைவர்
இஸ்ரேலில் கடந்த அக்டோபர் 7ஆம் திகதி நடந்த தாக்குதலுக்கு காரணமான ஹமாஸ் அமைப்பின் குழுவின் தலைவர் ஒருவர், கேரளாவின் மலப்புரத்தில் ஒருமைப்பாட்டு இளைஞர் இயக்கம் ஏற்பாடு செய்த மெய்நிகர் பேரணியில் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெய்நிகர் பேரணியை ஏற்பாடு செய்த ஒருமைப்பாட்டு இளைஞர் இயக்கம், மலப்புரத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்தின் இளைஞர் பிரிவுடன் தொடர்பை கொண்ட அமைப்பாகும்.
எழுந்துள்ள கண்டனம்
ஹமாஸ் தலைவர் கலீத் மாஸல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் உரையாற்றும் காணொளி ஒன்று காட்டப்பட்டுள்ளது.

பேரணியில் மாஸலின் மெய்நிகர் உரையை பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே சுரேந்திரன் கண்டித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கேரள பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, கேரளாவின் மற்றுமொரு இடத்தில் இன்று (28.10.2023) இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டித்து பேரணி ஒன்றை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri