எரிபொருள் பெறுவதற்காக இரவு பகலாக அலைந்து திரிய வேண்டிய நிலை: மக்கள் கவலை (Photos)
எரிபொருள் பெறுவதற்காக இரவு பகலாக அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருளுக்கான நெருக்கடி நிலைமை
காரணமாக நாளாந்தம் எரிபொருள் விநியோகிக்கப்படாத காரணத்தினால் அதனை பெறுவதில் பலத்த சிரமத்தை எதிர்நோக்கியுள்ளோம்.
அத்துடன் எரிபொருள் பெறவேண்டுமாயின் அதிகாலை 2 மணிக்கு எழுந்து வரிசையில் நின்று காலை 10 மணி அளவில் எரிபொருள் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமது நாளாந்த தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு - விசுவமடு பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் 2 கிலோ மீற்றருக்கும் அதிகமான தொலைவில் வரிசையில் நின்று எரிபொருளைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
காலையில் தேநீர் கூட அருந்தாமல் பல மணி நேரம் காத்திருந்து எரிபொருளைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை 7 மணிக்குப் பின்னரே எரிபொருள் வழங்கப்படுகிறது.
எனவே எரிபொருள்
நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வந்தவுடன் மக்களுக்கு உடனடியாக தாமதமின்றி
வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சனி வக்ர பெயர்ச்சியால் அடுத்த18 நாட்களில் இந்த 3 ராசிக்கும் வரப்போகும் போராபத்து....சனியால் அழிவு நிச்சயம்! Manithan

KGF 2 படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ஷங்கர் போட்ட பதிவு- என்னமா சொல்லியிருக்கிறார் பாருங்க Cineulagam

முன்னாள் மனைவி மீது பொய் வழக்கு போட்ட இமான்! குழந்தைகள் பாஸ்போர்ட் சர்ச்சை பற்றி அதிர்ச்சி தகவல் Cineulagam

பாக்கியா மாமனாரின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வந்த ராதிகா- தப்பிக்க வழி தேடும் கோபி, பரபரப்பான புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022