அமைச்சு பொறுப்பை ஏற்குமாறு 3 தடவைகள் எனக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டன: எச்.எம்.எம்.ஹாரீஸ்
புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள அமைச்சரவையில் அமைச்சுப் பொறுப்பு ஒன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு தனக்கு மூன்று தடவைகள் அழைப்புகள் விடுக்கப்பட்ட நிலையிலும் தான் அவர்களின் அழைப்புகளை முற்றாக நிராகரித்ததாக திகாமடுல்ல (அம்பாறை மாவட்டம்) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எச்.எம்.எம்.ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள அமைச்சரவையில் தனக்கு அமைச்சுப் பொறுப்பு ஒன்றைத் தர தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதனை ஏற்றுக் கொள்ளுமாறு மூன்று தடவைகள் ஆளும் தரப்பு உயர்மட்டத்திலிருந்து எனக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டன.
இருப்பினும் அவர்களின் அந்த அழைப்பை நான் நிராகரித்தேன். இன்று மக்கள் பொருளாதார ரீதியாகவும் மற்றும் பல்வேறு வகையிலும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் எந்தவொரு அமைச்சுப் பொறுப்பையும் தன்னால் ஏற்க முடியாது என அவர்களிடம் கூறினேன்.
நாட்டில் இன்று எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி அதனைத் தீர்க்க வேண்டும். மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் நான் மக்கள் பக்கமாக நின்றே செயற்படுவேன்.
இதேவேளை, எம்போன்றோர் தொடர்பில் இன்று பல்வேறு விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள்
முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் உண்மை நிலைமையை மக்கள் விரைவில் உணர்ந்து
கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri
