ஹட்டன் குடாகம காட்டுப் பகுதிக்கு அடையாளம் தெரியாதவர்களால் தீ வைப்பு
ஹட்டன் குடாகம காட்டுப்பகுதிக்கு அடையாளம் தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம தொடருந்து கடவைக்கு சமீபமாகவே குறித்த தீ வைப்பு நேற்று(04.02.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
தற்போது நிலவி வரும் வரட்சியான காலநிலையினை தொடர்ந்து இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதனால் தொடருந்து சமிக்ஞைகளும் பாதிக்கப்படலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கை
நீரூற்றுக்கள் காணப்படும் பிரதேசத்தில் குறித்த தீ வைப்பு இடம்பெற்றுள்ளதால் நீரூற்றுக்கள் அற்றுப்போய் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
தற்போது நிலவிவரும் வரட்சியான காலநிலையுடன் கடும் காற்றும் வீசுவதனால் தீ மிக
வேகமாக பரவியதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் வறட்சியான காலங்களில் காடுகளுக்கு தீ வைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் நிறுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam