ஹட்டன் குடாகம காட்டுப் பகுதிக்கு அடையாளம் தெரியாதவர்களால் தீ வைப்பு
ஹட்டன் குடாகம காட்டுப்பகுதிக்கு அடையாளம் தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம தொடருந்து கடவைக்கு சமீபமாகவே குறித்த தீ வைப்பு நேற்று(04.02.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
தற்போது நிலவி வரும் வரட்சியான காலநிலையினை தொடர்ந்து இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதனால் தொடருந்து சமிக்ஞைகளும் பாதிக்கப்படலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கை
நீரூற்றுக்கள் காணப்படும் பிரதேசத்தில் குறித்த தீ வைப்பு இடம்பெற்றுள்ளதால் நீரூற்றுக்கள் அற்றுப்போய் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
தற்போது நிலவிவரும் வரட்சியான காலநிலையுடன் கடும் காற்றும் வீசுவதனால் தீ மிக
வேகமாக பரவியதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் வறட்சியான காலங்களில் காடுகளுக்கு தீ வைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் நிறுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
