ஒரு கோடியைத் தாண்டிய சித்திரை புத்தாண்டு வருமானம்: ஹட்டன் பேருந்து டிப்போ தகவல்!
இலங்கை போக்குவரத்து சேவைக்குச் சொந்தமான ஹட்டன் டிப்போவின் சித்திரைப் புத்தாண்டு வருமானம் ஒரு கோடியைத் தாண்டியதாக ஹட்டன் டிப்போவின் சிரேஷ்ட பரிசோதகர் ஏ.சி.ஏஸ் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து நேற்றைய தினம் (15.04.2023) கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், சித்திரைப் புத்தாண்டுக்காக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கடந்த 12,13,14 ஆகிய திகதிகளில் ஹட்டனை நோக்கி வருகை தந்தனர்.
பேருந்து சேவை
இதனால் இந்த தினங்களில் ஹட்டன் டிப்போவின் வருமானம் ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. அதே போன்று இன்றைய தினமும் (நேற்று) பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் தொழிலுக்காகக் கொழும்பு நோக்கிச் செல்வதற்கு ஹட்டன் பேருந்து தரிப்பு நிலையத்தினை நோக்கி வருகை தந்துள்ளனர்.
அவர்கள் சிரமமின்றி செல்வதற்கு நாங்கள் சாரதிகளையும் நடத்துநர்களையும் தொலைபேசியின் ஊடாக அவர்களை அழைத்து உதவிகளைச் செய்து வருகின்றோம்.
எனினும், எமது டிப்போவில் ஊழியர்களின் குறைபாடு காரணமாக உடனுக்குடன் பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். காரணம் எமது டிப்போவில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் சாரதிகள், நடத்துநர்கள், அனைவரும் தூரப் பிரதேசங்களிலிருந்து தான் வர வேண்டும் அவர்கள் மாதத்திற்கு ஒரு தடவையே வீடு செல்கின்றனர்.
ஹட்டன் பேருந்து டிக்போ
இப்போது சித்திரை புத்தாண்டுக்குச் சென்றுள்ளதால் அவர்கள் வருவதற்குப் போக்குவரத்து வசதிகள் இருக்காது. ஆகவே தான் எங்களுக்கு அடிக்கடி பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
எனவே, நாங்கள் போக்குவரத்து அமைச்சரிடம் கோருவது, ஹட்டன் டிக்போவுக்கு போதுமான அளவு ஊழியர்களைத் தந்தால் நாங்கள் இதைவிட பாரிய சேவையினை முன்னெடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், இன்றைய தினம் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொழும்பு நோக்கிச்
செல்வதற்காகப் பெண்கள், சிறு குழந்தைகள் வயோதிபர்கள் உட்படப் பலர் பல
மணித்தியாலங்கள் காத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 2 மணி நேரம் முன்

மிகப்பெரிய புதையலை கண்டுபிடித்துள்ள இந்தியாவின் அண்டை நாடு.., அடுத்த 50 ஆண்டுகளுக்கான ஜாக்பாட் News Lankasri
