கறுப்பு பணத்தை கடன் வாங்க இலங்கை கட்டாயப்படுத்தப்படும்! - ஹர்ஷ டி சில்வா
இலங்கையின் பொருளாதாரம் குறித்து உண்மையை வெளிப்படுத்தியமைக்காக அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும், நாட்டின் வங்கித் துறை நெருக்கடியில் இருப்பதாக அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று தெரிவித்தார்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்படாவிட்டால் வங்கித் துறை நெருக்கடிக்கு செல்லும் என்று அமைச்சர் கம்மன்பில வெளிப்படையாகக் கூறியிருந்தார். உண்மையை பேசியதற்காக அவருக்கு நன்றி கூறவேண்டும் என்று ஹர்ஷ டி சில்வா செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
வங்கிகளுக்கு இடையிலான பண்டமாற்று காரணமாக வங்கித் துறை நெருக்கடி நிலையில் உள்ளது.
ஒரு டொலரை 199 ரூபா 90 சதத்துக்கு அரச வங்கி ஒன்று மற்றும் ஒரு அரச வங்கியிடம் இருந்து கொள்வனவு செய்தால், டொலர்களை குறைந்த விகிதத்தில் விற்பனை செய்வதற்கு மற்ற வங்கியுடன் உடன்படிக்கை செய்து கொள்கிறது.
கடந்த இரண்டு மாதங்களில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள இடைப்பட்ட வங்கி பண்டமாற்றுகள் நிகழ்ந்துள்ளன என்று அவர் கூறினார்.
இது தவிர, உயர்மட்ட அரச அதிகாரி ஒருவர் இலங்கை விரைவில் கோரப்படாத கடன்களுக்கு செல்ல நிர்பந்திக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதன் பொருள் சில தரப்புகள் மற்றும் நாடுகளிடமிருந்து குறைந்த வட்டி விகிதத்தில் கறுப்புப் பணத்தை கடன் வாங்க இலங்கை கட்டாயப்படுத்தப்படும் என்று அவர் ஹர்ஷ தெரிவித்தார்.
இந்தநிலையில் அரச அதிகாரிகள் நாட்டின் பொருளாதாரம் குறித்த சரியான விளக்கத்தை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு வழங்குவது முக்கியம். இல்லையென்றால், உண்மையைக் கண்டறிய அவர் உளவுத்துறை அதிகாரிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டியிருக்கும் என்று தமது கட்சி நம்புவதால், நெருக்கடியைத் தீர்க்க, மக்கள் நட்பு கட்சி என்ற வகையில், அரசாங்கத்துக்கு உதவ தாம் தயாராக இருப்பதாக ஹர்ஷ தெரிவித்தார். ,
அரசாங்கத்தால் பொருளாதாரத்தை கையாள
முடியாவிட்டால், அது நிர்வாகத்தை திறமையான கைகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று
அவர் வலியுறுத்தினார்.