தமிழர் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவரே சாணக்கியன் - நாடாளுமன்றில் ஹரிஸ் பகிரங்க குற்றச்சாட்டு
தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த கைக்கூலியே சாணக்கியன் எம்.பி என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரான எச்.எம்.எம்.ஹரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே ஹரிஸ் எம்.பி., சாணக்கியன் மீது இவ்வாறு விமர்சனம் முன்வைத்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவு சுமூகமாக காணப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸும் கூட இணைந்து பயணித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவுகளின் அடிப்படையில் சில தீர்மானங்களை எடுத்ததால் முஸ்லிம் காங்கிரஸ் விமர்சனங்களை கூட சந்தித்துள்ளது.
நிலைமை இப்படி இருக்கையில் காட்டிக் கொடுக்கின்றோம் என சாணக்கியன் விமர்சித்துள்ளார். நாம் காட்டிக்கொடுக்கும் குடும்பத்தில் பிறக்கவில்லை.
சாணக்கியன் என்பவர்தான் தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர். அவர் பிள்ளையானின் கைக்கூலி, சுதந்திரக்கட்சியின் கைக்கூலியாவார் என குறிப்பிட்டுள்ளார்.