அநுர தரப்புக்கு ஹரிணி மீதிருக்கும் அன்பு...
நாங்கள் மிக அன்புடன் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் வேலை செய்கின்றோம். அவர் எமக்கு அரசியலில் கிடைத்த பெரும் சொத்து என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
பிரதமர் ஹரிணியுடன் மிக நெருக்கமாக செயற்படுகிறோம். எமது அரசாங்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது. சஜித், நாமல் ஆகியோர் அழுது கொண்டு இருக்க வேண்டியது தான்.
பிரதமரின் பொறுப்பு
குறித்த ஐந்து வருடங்களை சரியாக செய்த பின்னர் மீண்டும் ஆட்சியை நாம் பிடிப்போம். பிரதமருக்கு அவருடைய அமைச்சை பார்க்கிலும் வேறும் அமைச்சுக்கான கேள்விகளுக்கு பதலளிக்க வேண்டும்.
ஆதலால் மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கேட்ட கேள்விக்கு காலம் கடத்தாமல் பதிலளிக்கும் முகமாகவே முதலில் வழங்கிய தகவல்களை குறிப்பிட தீர்மானித்தோம். அப்போது கூட அவர், என்னிடம் கேட்டார் தகவல்கள் சரியானவையா என்று?
அரசாங்க நிறுவனங்களில் சிலர் இன்னும் இருக்கிறார்கள். ராஜபக்சர்களுடன் இணைந்து திருட்டில் ஈடுபட்டவர்கள். அவர்கள் தகவல்களில் அடங்கியுள்ள எண்களில் மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள். குறித்த தகவல்களை தயாரித்து அனுப்பியவரே சொல்லியிருக்க கூடும் என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 16 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri
