ஹரினின் முடிவை பின்பற்றப்போகும் சஜித் கட்சியின் மேலும் சிலர்!
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படப் போவதாக அறிவித்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார உட்பட்டவர்களும் ஹரினை பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இது நகர்வு உறுதிப்படுத்தப்படவில்லை.
கட்சியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக ஹரின் பெர்ணான்டோ, எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்காமல் நாடாளுமன்றத்தில் சுதந்திரமாகச் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் அமைக்கப்படவுள்ள புதிய இடைக்கால அரசாங்கத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
தற்போதைய நிலையில் இடைக்கால நிர்வாகத்தை பொறுப்பேற்க முடியும் என்றபோதிலும், சஜித் பிரேமதாச அதற்கான முடிவை எடுக்காமையே ஹரினின் முடிவுக்கான காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இது, சஜித் பிரேமதாச தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியில் பெரும் பிளவை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam