ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் எளிமையான பிரதியை கோரும் ஹரின்
நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் எளிமையான பிரதி ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) நாடாளுமன்றத்தில் இன்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆணைக்குழுவின் அறிக்கை 87 பாகங்களாக நாடாளுமன்றத்திற்கு கிடைத்துள்ளதாகவும் அவற்றின் மொத்த பக்கங்கள் 69 ஆயிரத்து 800 எனவும் அதனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் எடுத்துச் செல்ல முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அறிக்கையின் எளிமையான பிரதி ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழங்கினால், அதனை அவர்கள் பயன்படுத்த இலகுவாக இருக்கும் எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam
