தமிழ்வின் சொந்தங்களுக்கு எமது தைத்திருநாள் வாழ்த்துக்கள்
நன்றியை பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக் காட்டான தைப் பொங்கல் திருநாள் இன்று மலர்ந்திருக்கின்றது.
உழவர் திருநாளாம் இன்று உலகளாவிய ரீதியில் உள்ள அனைத்து தமிழ் இந்து மக்களும் சூரியன் உதிக்கும் வேளையில் பொங்கலிட்டு தமது நன்றியை வெளிப்படுத்தி இந்த தைத் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
தை முதலாம் திகதி தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழாவாக இது கருதப்படுகின்றது.
அந்தவகையில் இன்று தமிழர் திருநாளாம் தைத்திருநாளைக் கொண்டாடும் உலகளவில் பரந்து வாழும் எமது தமிழ்வின் சொந்தங்களுக்கு தைத் திருநாள் வாழ்த்துக்களை கூறுவதில் பெருமகிழ்வடைகின்றோம்.
புதிதாக பிறந்திருக்கும் இந்த தை மாதம் இருளை அகற்றி அனைவரது வாழ்விலும் ஒளியை கொண்டு வந்து சேர்க்கவும் மலர்ந்திருக்கும் இந்த நாள் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்கவும் தமிழ்வின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
ஒரு பூப்புனித நீராட்டு விழாவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் 8 மணி நேரம் முன்
வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர் தடுத்து நிறுத்துங்கள் - தமிழக முதல்வருக்கு யாழ்.கடற்றொழிலாளர் அமைப்பு கோரிக்கை!
கட்டுவான தீ விபத்தில் 5 பேர் பலி..! பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்: தீயை கட்டுப்படுத்த கடும் பிரயத்தனம்