தமிழ்வின் சொந்தங்களுக்கு எமது தைத்திருநாள் வாழ்த்துக்கள்
நன்றியை பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக் காட்டான தைப் பொங்கல் திருநாள் இன்று மலர்ந்திருக்கின்றது.
உழவர் திருநாளாம் இன்று உலகளாவிய ரீதியில் உள்ள அனைத்து தமிழ் இந்து மக்களும் சூரியன் உதிக்கும் வேளையில் பொங்கலிட்டு தமது நன்றியை வெளிப்படுத்தி இந்த தைத் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
தை முதலாம் திகதி தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழாவாக இது கருதப்படுகின்றது.
அந்தவகையில் இன்று தமிழர் திருநாளாம் தைத்திருநாளைக் கொண்டாடும் உலகளவில் பரந்து வாழும் எமது தமிழ்வின் சொந்தங்களுக்கு தைத் திருநாள் வாழ்த்துக்களை கூறுவதில் பெருமகிழ்வடைகின்றோம்.
புதிதாக பிறந்திருக்கும் இந்த தை மாதம் இருளை அகற்றி அனைவரது வாழ்விலும் ஒளியை கொண்டு வந்து சேர்க்கவும் மலர்ந்திருக்கும் இந்த நாள் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்கவும் தமிழ்வின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 12 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam