தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர் மகிழ்ச்சி! திகா - மனோ தெரிவிப்பு
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவது எங்களுக்கு மகிழ்ச்சி ஆனால் அவர்களுக்கு தொழில் சுமை அதிகரிக்க கூடாது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரமும் தெரிவித்துள்ளனர்.
தற்போது தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு 1,750 ரூபா சம்பளத்தை வழங்க வேண்டுமானால், ஒரு நாளைக்கு பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவை 20 கிலோவிலிருந்து 25 கிலோவாக உயர்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிபந்தனையால் தொழிலாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் இதன் காரணமாக பல தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்வதற்கு தயக்கம் காட்டியும் வருகின்றன எனவும் ஹட்டனில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்தனர்.
பணிநீக்கம்
மேலும் தோட்ட முகாமையாளரால் பணிநீக்கம் செய்யப்பட்ட, கவரவலை தோட்ட தொழிலாளர்களின் சத்தியாகிரக போராட்டம் தொடர்பில், ஹட்டன் பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி காரியாலயத்தில், பேச்சு வார்த்தை ஒன்றினையும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (08) ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது குறித்து தொழிலாளர்களுக்கு உடனடியாக தொழிலை வழங்க வேண்டும் எனவும் இவர்களுக்கு முகாமையாளர்களால் இனிவரும் நாட்களிலும் எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உரிமைகள்
குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் மற்றும் தொழில் பாதுகாப்பு தொடர்பில் தாம் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்தநிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோகணேசன், பழனி திகாம்பரம் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரன், மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார், மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள், பணி இடைநிறுத்தம் செய்யபட்ட 8 தொழிலாளர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.





விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri