ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிராக கண்டன அறிக்கை கையளிப்பு
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவிலயலாளர் வி.விஸ்வச்சந்திரன் தாக்கப்பட்டமையினை கண்டித்து இன்று முல்லைத்தீவு நகர்பகுதியில் நடைபெற்ற கண்டன போராட்டத்தின் போது முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் ச.தவசீலனால் (S.Thavaseelan) கண்டன அறிக்கை வாசிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கைகள் அங்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கமிடமும், வேலன் சுவாமிகளிடமும் கையளிக்கப்பட்டுள்ளன.
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கும் அறிக்கையொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,இந்த அறிக்கை ஊடாக ஊடகவியலாளர்களை பாதுகாக்க கோரி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |