திருகோணமலை பகுதியில் கைக் குண்டு மீட்பு!
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உவர்மலை பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உவர்மலை லோவர் வீதியிலுள்ள கடற்கரைக்கு அருகில் கைக்குண்டு ஒன்று இருப்பதாக இன்று (03) தலைமை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.
இதனையடுத்து கைக்குண்டு இருப்பதை உறுதி செய்து திருகோணமலை நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதனை வெடிக்க வைப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
இந் நிலையில் குறித்த கைக் குண்டை விசேட பொலிஸ் அதிரடி படையினர் மீட்டதுடன் அதனை வெடிக்க வைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.