ஹமாஸின் மூன்று உயர்மட்ட உறுப்பினர்கள் தொடர்பில் இஸ்ரேலிய இராணுவம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
ஹமாஸுக்கு எதிராக நேற்று (03) நடத்திய தாக்குதல்களில், மூன்று மூத்த ஹமாஸ் தலைவர்களைக் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அரசாங்கத்தின் தலைவர் ரவ்ஹி முஸ்தாஹா, ஹமாஸின் அரசியல் பணியகத்தின் பாதுகாப்பு அதிகாரி சமே அல்-சிராஜ் மற்றும் தளபதி சமி ஓதே ஆகியோர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
ஹமாஸின் படைகள்
முஸ்தாஹா, ஹமாஸின் மூத்த செயற்பாட்டாளர்களில் ஒருவராக செயற்பட்டு வந்தார். அத்துடன் ஹமாஸின் படைகளின் முடிவுகளில் நேரடி பங்கை அவர் வகித்தார் என்றும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

ஹமாஸின் உயர்மட்ட தலைவர் யாஹ்யா சின்வாருக்கு, முஸ்தாஹா வலது கையாக செயற்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், 2015ஆம் ஆண்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை முஸ்தாஹாவை, உலகளாவிய பயங்கரவாதி என்று பிரகடனப்படுத்தியது.
அதேவேளை, உயிரிழந்தவர்களில் மற்றுமொருவரான சிராஜ் ஒரு அரசியல் பீட உறுப்பினர் என்றும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 20 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam