தீவிரமடையும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! ஹமாஸ் முக்கிய நபர் படுகொலை
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் ஆயுதப்படை செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இருப்பினும் இது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த தாக்குதலை இஸ்ரேலிய இராணுவத்தின் “குறைவற்ற செயல்பாடு” என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் பயங்கர தாக்குதல்
தாக்குதல் குறித்த கூடுதல் விவரங்களை இஸ்ரேல் இதுவரை வெளியிடவில்லை.ஆனால் காசாவின் அல்-ரிமால் பகுதியில் சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முக்கிய பயங்கரவாதி கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளது.

ஆனால், அல்-ரிமால் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி இருப்பதாகவும், அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri