இலஞ்சம் பெற்ற மாவட்ட பிரதம பொறியியலாளர் கைது
அம்பாந்தோட்டை மாவட்ட பிரதம பொறியியலாளர் மற்றும் புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் சாரதி ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்பது இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் முறைப்பாட்டுக்கு அமைய நேற்று (05.10.2023) ஹம்பாந்தோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.
நீதிமன்றில் முன்னிலை
இந்நிலையில் இது தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரையும் இன்று (06.10.2023) நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தவுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பில் இருந்து அங்கு சென்ற இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் குழுவினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் இந்தியாவில் தயாரிப்பு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
