நாட்டின் பல பகுதிகளிலும் ஹஜ் பெருநாள் தொழுகை
கல்முனை
கல்முனை ஹூதா ஜூம்ஆ பள்ளிவாசல், முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹூதா திடலில் வழமைபோன்று இடம்பெற்ற புனித ஹஜ்ஜுப் பெருநாள் நபி வழித் திடல் தொழுகை, ஆயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலுடன் இன்று (07) காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.
ஆண், பெண் இருபாலாருக்கும் ஒரே ஜமாஅத்தாக இடம்பெற்ற இத்தொழுகையையும், குத்பா பிரசங்கத்தையும் ஹுதா பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி ஸாபித் (ஸரயி,றியாதி) நடத்தி வைத்தார்கள்.
இம்முறை வழமையைவிட அதிகமாக கல்முனை, சாய்ந்தமருது மற்றும் கல்முனை இஸ்லாமாபாத் பிரதேசங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் சந்தோசத்துடன் புனித ஹஜ்ஜுப் பெருநாள் நபிவழி திடல் தொழுகையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார்
இஸ்லாமியர்களால் ஹஜ் பெருநாள் நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை மன்னாரில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் இன்றைய தினம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றது.
காலை 6.45 மணிக்கு பெண்களுக்கும் காலை 7.30 மணியளவில் ஆண்களுக்கும் பெருநாள் தொழுகை இடம் பெற்றது.
இவ் தொழுகை மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி எம்.அஸீம் தலைமையில் நடைபெற்றது. இதன் போது ஹஜ்ஜுப் பெருநாளின் முக்கியத்துவம், அல்குர்ஆன் சமய நற்சிந்தனைகள், பற்றியும் இங்கு எடுத்துக் கூறப்பட்டது.
மேலும் விசேடமாக துவா தொழுகைகள் இடம் பெற்றது. மேலும் மாவட்டத்தில் உள்ள ஏனைய பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகைகள் சிறப்பாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பறகஹதெனிய
பறகஹதெனிய ஹஜ் பெருநாள் தொழுகையும் மார்க்கச் சொற்பொழிவும் பறகஹதெனிய தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா அரபுக் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி
புனித ஹஜ் பெருநாளான இன்று கிளிநொச்சி நகர் ஜீம்ஆ பள்ளிவாசலிலும் தொழுகைகள் இடம்பெற்றுள்ளன.
திருகோணமலை
புனித ஹஜ் பெருநாள் திடல் தொழுகை மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (07) காலை இடம்பெற்றது.
மூதூர் அல் ஹஸனாஹ் சமூக அபிவிருத்தி மையம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
ஹஜ் பெருநாள் பிரசங்கத்தையும் தொழுகையையும் மௌலவி என்.எம்.ஹாரிஸ் நிகழ்த்தினார்.
இதன்போது, நாட்டின் நிரந்தர சமாதானமும் , நிலையான அபிவிருத்தியும் ஏற்பட வேண்டுமென விசேட துவா பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.
இப்ராஹிம் நபியின், தியாகத்தை நினைவூட்டும் இத் திருநாளை பிரதேச மக்கள், வணக்க வழிபாடுகளுடன் கொண்டாடினர்.
மருதமுனை
ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள்தொழுகையும் குத்பா பிரசங்கமும், அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று நடைபெற்றது.
மருதமுனை இஸ்லாமிய பிரசார மையத்தின் ஏற்பாட்டில் மருதமுனை தாறுல்ஹுதா மகளிர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் பிரதிப் பணிப்பாளர் நுவீஸ் மக்கி தொழுகையினை நடத்தி வைத்ததுடன் குத்பா பிரசாரத்தினையும் நிகழ்த்தினார்.
மேற்படி பகுதிகளில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளில் பல்லாயிரக்கணக்காகன மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
சாய்ந்தமருது, மாளிகைக்காடு
மாளிகைக்காடு அந் நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று இம்முறையும் பள்ளிவாசலில் நடைபெற்றது.
குத்பா உரையையும், பெருநாள் தொழுகையையும் பள்ளிவாசல் பேஸ் இமாம் அஷ் ஷெய்க் ஏ.எல்.எம் மின்ஹாஜ் (உஸ்மானி) நிகழ்த்தினார்.
மேலும் ஒவ்வொரு வருடமும் சாய்ந்தமருது ஜாமியுல் இஸ்லாஹ் ஜும்மா பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம் பெறும் திடல் தொழுகை இம்முறையும் சாய்ந்தமருது அஸ்ரப் ஐக்கிய பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இத் தொழுகையையும், குத்பா பிரசங்கத்தையும் அஷ்ஷெய்க் மௌலவி அபூபக்கர் கலீலுர் ரஹ்மான் (ஸலபி) அவர்கள் நிகழ்த்தி வைத்தார்.
முள்ளிப்பொத்தானை
புனித ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் தினமான இன்று (07) திருகோணமலை மாவட்ட முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் பொது விளையாட்டு மைதானத்திலும் தொழுகை இடம்பெற்றுள்ளது.
குறித்த திடல் தொழுகையை புஹாரி ஜூம் ஆ பள்ளிவாயல், ஈச் விளையாட்டு கழகம், புஹாரி ஜனாசா நலன்புரி சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
குத்பா பிரசங்கத்தை மௌலவி முர்ஷித் நிகழ்த்தினார். இதில் பெரும்பாலனவர்கள் கலந்து கொண்டதுடன் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களையும் ஒருவருக்கொருவர் கைலாகு கொடுத்து பகிர்ந்து கொண்டனர்.
வவுனியா
வவுனியா தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவாசல் ஏற்பாட்டில் புனித ஹஜ்ஜிப்பெருநாள் திடல் தொழுகை பட்டாணிச்சூரின் வேப்பங்குள குளவீதியில் நடை பெற்றது.
ஜமாஅத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஸாதிகீன்(பாரி)யினால் தொழுகை நடாத்தப்பட்டதுடன் இஸ்லாமியர்கள் பலரும் கலந்து தொழுகையில் ஈடுபட்டனர்.







ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
