அரோகரா கோஷங்கள் முழங்க எழுந்தருளிய குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ செல்லக் கதிர்காம முருகன்
மட்டக்களப்பு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தின் வருடாந்த தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இம்மாதம் பத்தாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய பெருவிழாவின் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று விசேட கிரியைகள் ஆரம்பமாகி வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது.
மேலும், சுவாமி உள் வீதி வலம் வருதல் நிகழ்வு இடம் பெற்றதை தொடர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதற்காக முத்து இரதத்தில் வள்ளி தெய்வானை சமேதரராய் முருகப்பெருமான் எழுந்தருளி மக்களுக்கு அருள்பாலித்தார்.
ஆயிரக்கணக்கான அடியார்கள்
நிகழ்வில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்.
ஆலய இக்கிரியை நிகழ்வுகள் யாவும் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ நவரத்தின முரசொலி மாறன் குருக்கள் தலைமையிலான குழுவினரால் மோற்கொள்ளப்பட்டன.
அரோகரா கோஷங்கள் முழங்க வேத பாராயணங்கள் ஒலிக்க வள்ளி செய்வானை சமேதரராக முருக பெருமான் மக்களுக்கு அருள் பாலித்தார்.
இந்நிலையில் நாளைய தினம் திங்கட்கிழமை (19.08.2024) ஆவணி பூரணையில் சமுத்திர தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri