சஞ்சீவ மீது துப்பாக்கிச்சூடு: நாடாளுமன்றில் பகிரங்க கேள்வி - அனைத்தையும் வெளிப்படுத்த முடியாது என்கிறார் அமைச்சர்
பாதாள உலக குழுக்களை ஒடுக்குவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எனினும் அவை அனைத்தையும் நாடாளுமன்றத்திற்கு முன் வெளிப்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் கேள்வி
அளுத்கடை நீதிமன்ற வளாகத்தின் 5ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (19.02.2025) நாடாளுமன்றத்தில் வைத்து கேள்வியெழுப்பிய போதே இவ்வாறு பதில் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறுகையில், பாதாள உலக விவகாரங்களை கையாள்வது அரசாங்கத்திற்கு பொறுப்பு. அதனால் தான் பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்
பாதாள உலகமும், கறுப்புப் பணமும், போதைப்பொருள் கடத்தலும் இருக்க முடியாது. இதில் ஈடுபடுபவர்களில் சிலர் இலங்கையில் கூட இல்லை.
நாங்கள் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம் என்று நான் கூற விரும்புகிறேன். பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அனைத்து நடவடிக்கைகளையும் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்த முடியாது. ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் கடுமையாக தலையிடுகிறது. பாதாள உலகத்தை விட்டுவைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam