துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பாடசாலை மாணவி உயிரிழப்பு
மின்னேரிய - கிரித்தலே பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிரித்தலை பகுதியைச் சேர்ந்த ஜே.ஐ.கோசலா சாமோத்ய பண்டார என்ற 17 வயதுடைய பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.
கடந்த 14ஆம் திகதி மாணவி தனது வீட்டுக்குப் பக்கத்து வீடொன்றில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை
ஹிகுராக்கொட வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.
பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் அங்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அண்மையில், பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
