குடும்பம் ஒன்றின் மீது பதுங்கியிருந்து துப்பாக்கி சூடு நடத்திய கும்பல்: பொலிஸார் வெளியிட்ட தகவல்
காலி, அஹுங்கல்ல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் காயமடைந்த சிசுவும் அவரின் தந்தையும் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் 4 மாத சிசுவின் கால் மற்றும் தந்தையின் வாயில் காயம் ஏற்பட்டுள்ளது.
அஹுங்கல்ல கல்வெஹர பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் கணவன் மற்றும் மனைவி கைக்குழந்தையுடன் பயணித்த போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சை
காயமடைந்த பெண் பலப்பிட்டிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். 32 மற்றும் 27 வயதுடைய தம்பதியரும் அவர்களது 4 மாதக் குழந்தையும் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் கல்வெஹர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தம்பதியினர் தமது வியாபார ஸ்தலத்திலிருந்து வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த போது, கல் வெஹெர பிரதேசத்தில் பதுங்கியிருந்த நபர் ஒருவரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கி சூடு
டி-56 ரக விமானங்கள் துப்பாக்கிச் சூடுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களை பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri