தப்பிச் செல்ல முயன்ற சாரதி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
பொலிசாரின் உத்தரவை அலட்சியம் செய்து தப்பிச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று (14.06.2023)அதிகாலை 3.00 மணியளவில் றம்புக்கணை, போலகம, கொட்டகம சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதியின் இடது பாதம் மற்றும் இடது கையில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்துள்ளது.
கேகாலை மருத்துவமனையில் அனுமதி

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த சந்தேகநபரை கேகாலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக பொலிசார் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் சந்கேத நபர் றம்புக்கணை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், தப்பி செல்ல முயன்றதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri