முல்லைத்தீவு - வலைஞர்மடத்தில் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் (Photos)
முல்லைத்தீவு - வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் 4500 T- 56 வகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
கிறிஸ்தவ தேவாலய வீதியிலுள்ள குறித்த வயல் காணியில் இன்று (27.12.2023) மண்ணை அகழ்ந்தெடுக்கும் போது துப்பாக்கி ரவை பெட்டிகள் இருந்ததனை காணி உரிமையாளர் அவதானித்துள்ளார்.
மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள்
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து முல்லைத்தீவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து துப்பாக்கி ரவைகளை மீட்டெடுத்துள்ளனர்.

T-56 வகை துப்பாக்கி ரவைகள் அடங்கிய ஆறு பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 4500 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam