கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு: நிலைமை மோசம் என்று தகவல்
கொலம்பிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், பழமைவாத கொலம்பிய செனட் உறுப்பினர்-மிகுவல் யூரிப் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்ற நம்பிக்கை மேலோங்கிய நிலையில், போகோட்டா நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பங்கேற்றிருந்தபோதே, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மோசமான நிலை
உள்ளூர் ஊடக தகவல்களின்படி, அவர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படங்கள், தலையில் கடும் காயங்களுடன், 39 வயதான ஜனாதிபதி வேட்பாளர்; இரத்தம் தோய்ந்த நிலையில் இருப்பதை காட்டுகின்றன எனினும், செனட்டரின் நிலை குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை.
செனட்டரின் எதிர்க்கட்சியான ஜனநாயக மையம், யூரிப் டர்பே மீதான தாக்குதலை கடுமையானது என்றும், ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறைச் செயல் என்றும் விபரித்துள்ளது.
படுகொலை முயற்சி
அமெரிக்க ராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ, "செனட்டர் மிகுவல் யூரிப் மீதான படுகொலை முயற்சியை கடுமையாக கண்டித்துள்ளார்.
இது ஜனநாயகத்திற்கு நேரடி அச்சுறுத்தலாகும் என்று குறிப்பிட்டுள்ள அவர், கொலம்பிய அரசாங்கத்தின்; வன்முறை கலாசாரத்தையும் விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
