அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்யும் வளைகுடா நாடுக
ஈரானுடனான தற்போதைய மோதல் சூழல், அமெரிக்காவுடனான தங்களின் நீண்டகால பாதுகாப்பு உறவுகளை வளைகுடா நாடுகள் மீண்டும் ஒருமுறை ஆராய வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளதாக அரபு வளைகுடா நாடுகளின் நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அறிஞர் உசேன் இபிஷ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் படைகளுக்குத் தளம் அமைத்துக் கொடுத்த பின்னரும், சவூதி அரேபியா, கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகள் ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சவூதி மீதான 2019 தாக்குதல்
அமெரிக்காவின் பாதுகாப்பு கூட்டாளியாக இருப்பதால் தங்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு என்பது நடைமுறையில் வெறும் அனுமானமாகவே உள்ளது என்றும், சவூதி மீதான 2019 தாக்குதல் மற்றும் அமீரகம் மீதான ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை அமெரிக்காவால் தடுக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், வொஷிங்டனின் ஈரானுக்கு எதிரான தீவிரக் கட்டுப்பாட்டு உத்திகளில் இணைவது தங்களுக்குப் பாதுகாப்பைத் தராது என்பதை உணர்ந்துள்ள வளைகுடா நாடுகள், தற்போது மிகவும் எச்சரிக்கையான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.
ஈரானின் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இடைக்கால அரசை வழிநடத்தத் தயார்! இளவரசர் ரெசா பஹ்லவி அதிரடி அறிவிப்பு
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri