மீண்டும் ஜீ.எஸ்.டி வரி
பொருட்கள் மற்றும் சேவை வரியை (GST) மீண்டும் அறிமுகப்படுத்தும் யோசனை இன்றைய தினம் அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இதனை தவிர தற்போது 15 சத வீதமாக இருக்கும் பெறுமதி சேர் வரியை (VAT) 18 சத வீதமாக மேலும் மூன்று வீதத்தில் அதிகரிக்கும் யோசனையும் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) அமைச்சரவைக்கு இந்த யோசனையை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) பதவிக்கு வந்த பின்னர், வரி விதிப்புகள் சிலவற்றை தளர்த்தினார், இதன் காரணமாக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டதுடன் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிக்கு இதுவும் ஒரு காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.
இப்படியான சூழ்நிலையிலேயே மீண்டும் பெறுமதி சேர் வரியை அறிமுகப்படுத்தும் யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 13 மணி நேரம் முன்
உலகமே எதிர்பார்த்த ஈரானின் புதிய உச்ச தலைவரின் முதல் அறிக்கை! தன்னை முன்னிலைப்படுத்த தவறிய மொஜ்தபா கமேனி
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri