நாட்டிற்கு அதிகளவு வருகை தரும் சுற்றுலா பயணிகள்
இலங்கைக்கு, இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் 7,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோவிட் காரணமாக சரிவடைந்த சுற்றுலாத்துறை இப்போது படிப்படியாக மீண்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் மொத்தம் 45,413 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.அவர்களில் 7,096 பேர் அக்டோபர் 01 முதல் அக்டோபர் 13 வரை வருகை தந்துள்ளனர்.
இவர்கள், இந்தியா, கஸகஸ்தான், ஜெர்மனி, யுக்ரைன், அமெரிக்கா, சீனா, கனடா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை, பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதற்கான போக்கு அதிகரித்து வருவதாக சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நாட்டிற்கு அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்க தேவையான விளம்பர திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam