தென்னிலங்கையை உலுக்கிய வன்முறை : ஒருவர் கொலை - இருவர் படுகாயம்
மொரட்டுவ பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்வர்களை பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வன்முறையின் போது கட்டுபெத்த பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வன்முறை
காயமடைந்த மூவர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

பழைய தகராறு காரணமாக உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri