தென்னிலங்கையை உலுக்கிய வன்முறை : ஒருவர் கொலை - இருவர் படுகாயம்
மொரட்டுவ பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்வர்களை பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வன்முறையின் போது கட்டுபெத்த பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வன்முறை
காயமடைந்த மூவர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
பழைய தகராறு காரணமாக உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
