மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் புதிய வீட்டுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு!
மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது.
அடிக்கல் நாட்டு நிகழ்வு
இந்நிகழ்வு, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்ணம் தலைமையில் இன்று (07.06.2025) இடம்பெற்றது.
முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட ஆறு பயனாளிகளில், இருதயபுரம் கிழக்கிலும் திமிலதீவிலும் 2 பயனாளிகளுக்கான வீடுகளுக்குரிய அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டு வீட்டுக்கான அடி கல்லை நாட்டு வைத்தார்.
மானிய தொகை
சிறப்பு அதிதியாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் டி.சுபாஸ்கரன் கலந்து கொண்டார்.
தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஒரு வீட்டிற்கு பத்து லட்சம் ரூபாய் அரசாங்கத்தினால் மானிய தொகையாக வழங்கப்பட உள்ளன. இன்றைய நிகழ்வுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகள், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரிகள், பயனாளிகள் உட்பட பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
