அக்போகம பகுதியில் கைக்குண்டு மீட்பு(Photo)
அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்போகம பகுதியில் கற்பாறைகளுக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் அக்போகம பகுதியில் கற்பாறைகளுக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் ஒன்றினை இன்று(14) மாலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைக்குண்டு
கந்தளாய் குளத்தினை அண்டிய பகுதியில் போடப்பட்டிருந்த கருங்கற்பாறைகளுக்குள்ளே இவ்வாறு கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
அக்போபுர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடைப்படையினரின் உதவியுடன் இந்த கைக்குண்டினை மீட்டுள்ளனர்.
கந்தளாய் நீதிமன்றம்
இதையடுத்து, கந்தளாய் நீதிமன்ற நீதவானின் உத்தரவின் பேரில் கைக்குண்டினை செயழிலக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



