கனடாவில் தமிழர் ஒருவருக்கு கிடைத்த பெரும் அதிஷ்டம்!
கனடாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் வாங்கிய லொட்டரி டிக்கெட் மூலம் இலங்கை மதிப்பில் சுமார் 1,62,51,236 ரூபாய் பணம் வென்றுள்ளார்.
கனடாவில் உள்ள மிசிசாகா பகுதியில் வசிக்கும் 59 வயதான கோபாலநாதன் சதாசிவம் என்பவருக்கே இந்த அதிஷ்டம் கிடைத்துள்ளது. இவர் வால்மார்ட்டில் உள்ள சீஎன்ஐபி கியோஸ்க்கில் ஒரு கனடிய டொலர் செலவு செய்து லொட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார்.
இந்நிலையில், அவர் வாங்கிய லொட்டரிக்கு சுமார் $100,000 கனடிய டொலர்கள் பரிசு தொகை கிடைத்துள்ளது. இலங்கை மதிப்பில் சுமார் 1,62,51,236 ரூபாய் பணத்தை அவர் வெற்றிபெற்றுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கோபாலநாதன் சதாசிவம்,
“இந்த நாளை என் வாழ்நாளில் மறக்க முடியாது என்று தெரிவித்தார். இந்த மகிழ்ச்சியான செய்தியை முதலில் எனது மனைவியிடம் கூறியதும் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். நாங்கள் இருவரும் எங்கள் குழந்தைகளிடம் கூறினோம். அவர்கள் எங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த பணத்தை வைத்து தனது சில கொடுப்பனவுகளை செலுத்த திட்டமிட்டுள்ளோம். மீதமுள்ள பணத்தை குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்ய உள்ளதாக கோபாலநாதன் சதாசிவம் தெரிவித்தார்.
மேலும் பாதுகாப்பான சூழல் நிலவும் பொழுது குடும்பத்துடன் விடுமுறைக்கு பயணம் செய்ய உள்ளதாகவும் அவர் புன்னகையுடன் தெரிவித்தார்.
கோபாலநாதன் சதாசிவம் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam