சர்ச்சையை ஏற்படுத்திய தரம் 6 ஆங்கில பாடத்திட்டம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Sri Lankan Peoples Sri Lanka Government Harini Amarasuriya Law and Order Education
By DHUSHI Jan 31, 2026 04:06 AM GMT
Report

சர்ச்சைக்குரிய கல்வித் தொகுதி (Module) தொடர்பில் பயிற்சியளிக்கப்பட்ட ஆசிரியர்களிடமும் வாக்குமூலங்களைப் பெற்று, அது தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கங்கொடவில நீதவான் ருவந்திகா மாரசிங்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்த போதே நேற்று(30.01.2026) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கைகலப்பில் முடிந்த வாய்த்தர்க்கம் - காயமடைந்த நபர் வைத்தியசாலையில்...

கைகலப்பில் முடிந்த வாய்த்தர்க்கம் - காயமடைந்த நபர் வைத்தியசாலையில்...

குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகள்

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் தரம் 6 ஆங்கிலப் பாடத் தொகுதியில், சிறுவர்களுக்குப் பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

சர்ச்சையை ஏற்படுத்திய தரம் 6 ஆங்கில பாடத்திட்டம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Grade 6 Module Controversy

இது தொடர்பில், அந்த திணைக்களம் கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் விடயங்களை அறிக்கையிட்டிருந்ததுடன், நீதிமன்றத்தின் அறிவிப்புக்கமைய விசாரணைகளின் முன்னேற்றத்தை அதன் அதிகாரிகள் நேற்றும் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

அத்துடன், இந்த வழக்கில் இடையீட்டுத் தரப்பு சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன, குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மந்தகதியில் முன்னெடுப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கத்திலுள்ள கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அனைவரும் பொறுப்புக் கூறவேண்டிய இந்தச் சம்பவத்தில், இரண்டு அதிகாரிகளின் சேவையை மட்டும் இடைநிறுத்தி இதனை ஒரு சாதாரணச் செயலாகக் காட்ட முனைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்திற்கு விடுத்திருந்த காலக்கெடு நிறைவு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரசாங்கத்திற்கு விடுத்திருந்த காலக்கெடு நிறைவு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேலும், சர்ச்சைக்குரிய தொகுதியின் 51 மற்றும் 52 ஆம் பக்கங்களில் குறித்த இணையத்தளம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் அந்தப் பக்கங்கள் 47 மற்றும் 48 எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மைத்ரி குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.  

வாத பிரதிவாதங்கள்

விசாரணை அதிகாரிகள் அந்த தொகுதியொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, சர்ச்சைக்குரிய இணையத்தளம் தொகுதியின் 47 மற்றும் 48 ஆம் பக்கங்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அதே போன்று, குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள தொகுதி, கடந்த 2025 டிசம்பர் 23 ஆம் திகதி அச்சிடப்பட்ட ஒன்று என்றும் அந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சர்ச்சையை ஏற்படுத்திய தரம் 6 ஆங்கில பாடத்திட்டம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Grade 6 Module Controversy

எவ்வாறாயினும், ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்பட்ட தொகுதி அதுவல்ல என்றும், வேறொரு தொகுதியையே அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் இடையீட்டுத் தரப்பு சட்டத்தரணிகள் மீண்டும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இவற்றையெல்லாம் பார்த்து கொண்டிருந்த நீதிவான், அந்த இரண்டு தொகுதிகளையும் சான்றுப் பொருட்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகளின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது ஏன் எனப் பின்னர் நீதவான் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று மீண்டும் போராட்டம்

திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று மீண்டும் போராட்டம்

இதற்குப் பதிலளித்த விசாரணை அதிகாரிகள், தொகுதியைத் தயாரித்த இரண்டு அதிகாரிகளே இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், கல்வி அமைச்சின் உள்ளக விசாரணையின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பதிலளித்துள்ளனர். 

நீதிமன்ற உத்தரவு

சர்ச்சைக்குரிய சம்பவத்தின் போது கடமை ரீதியான கவனக்குறைவு ஏற்பட்டுள்ளதா? அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்ட செயலா?

இதன் மூலம் பொதுச் சொத்து துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பிலும், இந்த தொகுதி தொடர்பில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களிடமும் வாக்குமூலம் பெற்று விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு நீதவான் அந்தச் சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்திய தரம் 6 ஆங்கில பாடத்திட்டம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Grade 6 Module Controversy

சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் மீது சந்தேகம் நிலவுமாயின், அவரும் இதில் ஒரு சாட்சியாளராக இருக்க வேண்டும் எனவும் நீதவான் அறிவித்துள்ளார்.

அத்துடன், விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கையிடுமாறும் கங்கொடவில நீதவான் ருவந்திகா மாரசிங்க உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US