அரச வங்கிகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அரச வங்கி கட்டமைப்பினை விற்பனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர் கயந்த தெஹிவத்த குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது அவர் இந்த குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார்.
மத்திய வங்கி பணவீக்கத்தின் அளவை நூற்றுக்கு ஐந்து வீதமாக பேணுவதற்கு திட்டமிட்டு இருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் எதிர்பார்க்கப்பட்ட அளவில் பண வீக்கத்தினை பேணுவதற்கு முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், காணிகள், வாகனங்கள் மற்றும் பங்குச் சந்தை பங்குகள் உள்ளிட்டனவற்றின் விலைகள் அதிகரித்துச் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி மக்களின் வருமானத்தின் பெரும் பகுதி கடன் மற்றும் வட்டி என்ற அடிப்படையில் வங்கிக் கட்டமைப்பிற்கு செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி நாட்டின் வங்கியாளர்களும் அரசாங்கமும் வரி மற்றும் அபராதம் என்ற அடிப்படையில் மக்களின் பணத்தை சுரண்டுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை அரசாங்கம் அரச வங்கி கட்டமைப்பை விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும் இந்த நடைமுறையானது இலங்கை போன்ற நாடொன்றுக்கு பொருத்தமுடையதல்ல என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த அரசாங்கம் ஓர் கைப்பாவையாக செயல்பட்டு வருகின்றது என கயந்த தெஹிவத்த குற்றம் சுமத்தியுள்ளார்.



