தனியார் துறை ஊழியர்களுக்கான நற்செய்தி
தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் திறந்த மற்றும் பொறுப்புக்கூறல் அரசாங்கத்திற்கான துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் தனியார் துறை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து தீவிரமாக அவதானம் செலுத்தப்பட்டதாக குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சம்பள அதிகரிப்பு
அதன்படி, இந்த சம்பள அதிகரிப்பில் தொழிலாளர் அமைச்சகத்தின் தலையீடு எப்படி இருக்கும் என்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், தனியார் துறையில் சுமார் 3 மில்லியன் சம்பளம் பெறும் ஊழியர்கள் மட்டுமே தொழிலாளர் சட்டத்தின் கீழ் உள்ளதாக தொழிலாளர் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்படி, தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 12,500 ரூபாவில் இருந்து 21,000 ரூபாவாக அதிகரிக்க தொழில் அமைச்சு அதிகாரிகள் முன்மொழிவொன்றை சமர்ப்பித்துள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாயில் இருந்து 1700 ரூபாவாக அதிகரிக்க தொழில் அமைச்சு முன்மொழிந்துள்ளதாகவும் அதிகாரிகள் குழுவிடம் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, தனியார் துறை ஊழியர்களின் சேவைகளை மதிப்பீடு செய்த குழுவின் தலைவர், தொழிலாளர் அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட ஊதிய உயர்வை உரிய காலத்தில் நிறைவேற்ற தேவையான பரிந்துரையை வழங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri
