பணத்தை சுரண்டும் நோக்கில் இலங்கை அரசாங்கம் : பொதுமகன் விசனம் (Video)
இலங்கை அரசாங்கம் நாட்டு மக்களை பற்றி சிந்திக்காது தங்களுடைய ஆதாயத்தை அதிகரிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளது என பொது மகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திடம், கருத்துக்களை பகிர்ந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“மகிந்த அரசாங்கம் மக்களுக்கு அநியாயம் இழைத்ததோடு ரணில் அரசாங்கத்தாலும் தொடர்ச்சியாக மக்களுக்கு அநியாயமே இழைக்கப்பட்டு வருகின்றது.
ஒரு குடும்பத்தில் ஒரு நாள் உணவுக்கு மட்டும் 2,000 ரூபாவுக்கு மேல் செலவாகின்றது. நாம் ஒரு வேளை உணவு உட்கொண்டால் மற்றொரு வேளை பட்டினியாக உள்ளோம்.
அரசாங்கம் மக்களை பற்றி கவலை கொள்ளாது அரசாங்கத்தை நடத்துபவர்களின் ஆதாயத்தையே நோக்கமாக கொண்டுள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |