வவுனியாவில் அம்பியுலன்ஸ் வண்டியிலேயே உயிரிழந்த கோவிட் நோயாளி
கொரோனா தொற்றாளர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த 24ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்றாளர் ஒருவர் வவுனியாவில் இருந்து அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டியில் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.
82 வயதுடைய முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
திடீரென ஏற்பட்ட சுவாஸ பிரச்சினை காரணமாக அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவர் தொற்றாளர் என்பது உறுதியாகியுள்ளது.
உயிரிழந்த நபருக்கான தகன நடவடிக்கை அனுராதபுரம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam