தனியார் ஊடகம் ஒளிபரப்பிய நாடாளுமன்ற பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான காணொளி
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற அறைக்குள் இடம்பெற்ற சம்பவங்கள் அடங்கிய காணொளியை தனியார் ஊடகங்களுக்கு வெளியிட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சபாநாயகர் இருக்கையின் இடது புறத்தில் உள்ள இடத்தில் இருந்து கையடக்கத் தொலைபேசி மூலம் நாடாளுமன்ற அறைக்குள் நடந்த சம்பவங்கள் காணொளி படம் பிடிக்கப்பட்டு தனியார் தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கும், சபை நடவடிக்கைகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இது சட்டவிரோதமான செயலாகும் என்று குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன், சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை வெளிப்படுத்துமாறு சபாநாயகரிடம் கேட்டுள்ளார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 2 மணி நேரம் முன்
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri