தேர்தலை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்கும் அரசாங்கம்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பாக அரசாங்கத்திற்குள் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உறுப்பினர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கும் யோசனை
தேர்தலை ஒத்திவைத்து, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்து தேர்தலை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என அமைச்சர்கள் சிலர் யோசனை முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், அவற்றின் நிர்வாகம் விசேட ஆணையாளர் அல்லது பிரதேச செயலாளருக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைகள் நிறுவப்பட வேண்டும்
எது எப்படி இருந்த போதிலும் தேர்தலை ஒத்திவைப்பது சம்பந்தமான அரசாங்கம் இதுவரை இறுதி முடிவுகள் எதனையும் எடுக்கவில்லை.
கடந்த 2028 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அமைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
அவற்றின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைகளை நிறுவ வேண்டும்.
அதேவேளை உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், அதற்கு எதிராக வழக்கு தொடர எதிர்க்கட்சிகள் ஏற்கனவே திட்டமிட்டுள்ளன.